![மணலி | சாலையில் தேங்கிய கழிவு நீரை நீக்க நடவடிக்கை எடுக்க, பெண்கள் மண்டல அலுவலகத்தை முற்றுகை camera iphone 8 plus apk](https://i.ytimg.com/vi/o1rkT5n2ApY/maxresdefault.jpg)
மணலி எம் ஜி ஆர் நகரில் சாலையில் தேங்கி உள்ள கழிவு நீரை நடவடிக்கை எடுக்க கோரி 100 க்கும் மேற்பட்ட பெண்கள் மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டனர். திருவொற்றியூர் மணலி எம்ஜிஆர் நகர் 1வது தெருவில் வீட்டின் அருகே உள்ள சாலைகளில் கழிவுநீர் தேங்கி இருப்பதால் துர்நாற்றம் வீசுவதாக அந்த பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்,கடந்த ஒரு வாரமாக கால்வாயில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையில் குளம் போல் தேங்கி இருப்பதால் குழந்தைகள் மற்றும் பள்ளி செல்லும் சிறுவர்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் இருப்பதால் மாநகராட்சி அதிகாரிகளுக்கு பலமுறை புகார் அளித்துள்ளனர்,ஆனால் அதிகாரிகள் கண்டு கொள்ளாததால் ஆத்திரமடைந்த அந்த பகுதி பெண்கள் மாநகராட்சி மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. இதனிடையே தகவல் அறிந்து வந்த போலீசார் பெண்களிடம் சமரசம் செய்து மண்டல அலுவலக் அதிகாரிகளிடம் பாதிக்கப்பட்டவர்களை அழைத்து பேச்சு நடத்தினர். இதில் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் கூறியதை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
Like: https://www.facebook.com/Captainnewstv
Follow: https://twitter.com/captainnewstv
Web: http://www.captainnews.net
மணலி | சாலையில் தேங்கிய கழிவு நீரை நீக்க நடவடிக்கை எடுக்க, பெண்கள் மண்டல அலுவலகத்தை முற்றுகை camera iphone 8 plus apk | |
3 Likes | 3 Dislikes |
79 views views | 133K followers |
News & Politics | Upload TimePublished on 4 Sep 2019 |
Không có nhận xét nào:
Đăng nhận xét